``யூடியூபர் வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டே சொன்ன வார்த்தை..'' மேற்கோள் காட்டி முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Update: 2024-10-19 15:35 GMT

பல மாநிலங்களில் இருந்து வதந்தி பரப்பியவர்களை தமிழக அரசு தேடிக் கண்டுபிடித்து, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொண்டதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற தென் பிராந்திய காவல்துறை ஒருங்கிணைப்பு குழு மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், கேரள காவல்துறையினர் கொடுத்த தகவலை வைத்து, நாமக்கல் மாவட்டத்தில் ஏ.டி.எம். பணத்தை கொள்ளையடிக்கும் கொடுங்கும்பலை தமிழ்நாடு காவல்துறையினர் வெற்றிகரமாக கைது செய்ததாக தெரிவித்தார். இந்தக்கும்பலின் குற்றநடவடிக்கை குறித்து தமிழ்நாடு காவல்துறை, சம்பந்தப்பட்ட மாநிலங்களை உஷார் படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்