"பிரதமர் நேரில் பார்த்து 15 நாட்கள் ஆகியும் ஒன்றும் நடக்க வில்லை" - கண்ணீர் விடும் வயநாடு

Update: 2024-08-26 09:09 GMT

பிரதமர் மோடி பார்வையிட்டு சென்று 15 நாட்கள் கடந்த நிலையில், மத்திய அரசின் உதவி கிடைக்குமா என எதிர்பார்த்து வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் காத்திருக்கின்றனர்.

வயநாடு நிலச்சரிவை பாதிப்பை, கடந்த 10ஆம் தேதி பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆவ்யு செய்தார். நிலச்சரிவு பாதிப்பு தொடர்பாக கேரளா அரசு அறிக்கை சமர்ப்பித்தால் விரைந்து உதவி செய்யப்படும் என பிரதமர் அறிவித்திருந்தார். ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பில் இழப்பு ஏற்பட்ட நிலையில், முதற்கட்ட புனரமைப்பு பணிகளுக்காக 900 கோடி ரூபாய் தேவை என கடந்த 18ஆம் தேதி மத்திய அரசிடம் கேரளா அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. பிரதமர் மோடி ஆய்வு செய்து 15 நாட்கள் கடந்த நிலையில், மத்திய அரசின் உதவி கிடைக்குமா என நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்