"மோடி, அமித்ஷா சொல்லி தான் ஈபிஎஸ் இப்படி செய்தாரா?" - திருமாவளவன் கிளப்பிய சந்தேகம்

Update: 2024-07-05 04:54 GMT

"மோடி, அமித்ஷா சொல்லி தான் ஈபிஎஸ் இப்படி செய்தாரா?" - திருமாவளவன் கிளப்பிய சந்தேகம்

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், சிவசங்கர் ஆகியோர் உடனிருந்தனர். நேமூர், ஒரத்தூர், தொரவி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட திருமாவளவன், ஒரத்தூரில் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார்.அப்போது பேசிய அவர், திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இல்லையென்றால் பாஜக தமிழ்நாட்டில் ஒரு பெரிய சக்தியாக வளர்ந்து இருக்கும் என்றார். பாஜகவை, பாமக தூக்கி பிடிப்பதை மக்கள் ஏற்கவில்லை என்றும் கூறினார் .

Tags:    

மேலும் செய்திகள்