“அன்பால் பிரதமர் மோடியை..“ - ராகுல் காந்தி பேச்சு | PM Modi | Rahul gandhi | ThanthiTV

Update: 2024-09-23 13:49 GMT

ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், பா.ஜ.க.வும் நாட்டில் வன்முறையை பரப்புவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்..

பூஞ்ச் மாவட்டத்தில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, ஜம்மு - காஷ்மீர் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, நாட்டில் முதல்முறையாக ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக்கப்பட்டு இருப்பதாக விமர்சனம் செய்தார். ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றவர், நாட்டில் வன்முறையை பரப்பும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவுக்கு தெரிந்தது எல்லாம் வெறுப்பு அரசியல்தான் என விமர்சனம் செய்தார். வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது, அன்பால் மட்டுமே வெல்ல முடியும் என்ற ராகுல் காந்தி, அன்பால் பிரதமர் மோடியின் உளவியலை தகர்த்தெறிந்திருப்பதாக தெரிவித்தார்....

Tags:    

மேலும் செய்திகள்