``எதற்கும் தயார்’’ - கோபத்தில் சீறிய எடப்பாடி பழனிசாமி

Update: 2024-09-20 10:39 GMT

சென்னையில் மழைநீர் வடிகால்வாய், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு டென்டர் விட்டதில் முறைகேடு நடைபெற்றதாக, அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார். இதன்அடிப்படையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் 10 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் எஸ்.பி வேலுமணி மீது வழக்கு பதிவு செய்ததற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள அதிமுக தயார் என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்