``அதிரடி மாற்றம்..?'' பரபரப்பான சூழலில்... லிஸ்டோடு டெல்லி பறந்த செல்வப்பெருந்தகை

Update: 2024-10-09 14:28 GMT

தமிழகத்தில் புதிய காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் கட்சியை வலுவாக்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆட்சியமைக்க வலிமையான மற்றும் 50 வயதுக்கு குறைவான இளம் மாவட்ட தலைவர்களை தேர்வு செய்ய ராகுல் காந்தி கேட்டுக் கொண்டிருந்தார். அவரது உத்தரவுப்படி தமிழகத்தில் இளம் மாவட்ட தலைவர்களை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட தலைவர் என 117 மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இப்போது இந்த புதிய நிர்வாகிகள் பட்டியலோடு செல்வப்பெருந்தகை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு டெல்லி தலைமையோடு ஆலோசித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் திமுக, 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்துள்ளது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசும், 2026 தேர்தலை புதிய நிர்வாகிகளோடு சந்திக்க தயாராகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்