சோழ தேசத்தில் மலரப்போகும் பூங்கா.. திறந்து வைக்கிறார் முதல்வர் | CM Stalin

Update: 2024-09-23 04:49 GMT

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக் கூடம், 4 சேமிப்பு கிடங்கு வளாகங்கள் உள்ளிட்டவற்றை திறந்து வைக்கிறார். டிஎன்பிஸ்சி வாயிலாக உதவி வனப்பாதுகாவலர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 9 பேருக்கும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 48 நபர்களில், 5 பேருக்கும் பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்குகிறார். மேலும், தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்திலும், சேலம் மாவட்டம், ஆனைக்கவுண்டன்பட்டி மற்றும் கருப்பூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை திறந்து முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். .

Tags:    

மேலும் செய்திகள்