நிதி ஒதுக்கிய மத்திய அரசு... பிரதமர் மோடிக்கு தமிழ் மக்களின் மகிழ்ச்சியுடன் தமிழிசை கொடுத்த பேட்டி

Update: 2024-10-04 03:59 GMT

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்துக்கு 63 ஆயிரத்து 236 கோடி ரூபாய் நிதி ஒதுக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமருடனான முதலமைச்சரின் சந்திப்பு, தமிழ்நாடு பாஜகவின் கோரிக்கை என நீண்டநாள் காத்திருப்புக்குப் பின்னர் இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பிரதமர் மோடி மீது திமுக எவ்வளவு விமர்சனம் வைத்தாலும், தமிழக மக்கள் அக்கறை கொண்டுள்ளதை பிரதமர் மீண்டும் நிரூபித்துள்ளார் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்