அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு.. போனஸ் ரூ.15000-ஆக உயர்வு

Update: 2024-07-22 09:32 GMT


கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 45 ரூபாய் உயர்த்தியும் மற்றும் பல்வேறு பணபலன்களை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டதாக, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோயிலில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் அரசு ரப்பர் கழக தொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன், அமைச்சர்கள் மதிவேந்தன் மற்றும் மனோ தங்கராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதிவேந்தன்,

தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 45 ரூபாய் ஊதியம் உயர்த்தப்பட்டதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்