மக்களவையில் பாஜகவை சீண்டிய சு.வெங்கடேசன்... நேருக்கு நேர் பார்த்து கேட்ட கேள்வி

Update: 2024-07-02 03:22 GMT

மன்னராட்சி எப்போது ஒழிந்ததோ அப்போதே செங்கோலின் மகிமையும் ஒழிந்து விட்டதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர், தெய்வத்தின் குழந்தை என்று பிரதமர் சொன்னதை மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை... தெய்வத்தால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? என்றார். மன்னராட்சி எப்போது ஒழிந்தபோதே செங்கோலின் மகிமையும் ஒழிந்து விட்டதாக தெரிவித்த சு.வெங்கடேசன், செங்கோலை கையில் வைத்திருந்த மன்னர்கள் பெண்களை அந்தப்புரத்தில் அடிமையாக வைத்திருந்த‌தார்கள் தெரியுமா? என்று கேள்வி எழுப்பினார். செங்கோலை கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் வைத்ததன் மூலம் பெண்களுக்கு என்ன செய்தியை சொல்ல வருகிறீர்கள்? என்றும் வினவினார். செங்கோல் என்பது மன்னராட்சி குறியீடு மட்டுமின்றி அறம் மற்றும் நேர்மையின் குறியீடு என்ற சு.வெங்கடேசன், பாஜகவுக்கும் நேர்மைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? என்றும் கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்