"மீண்டும் கெஜ்ரிவால்..!" அதிஷி கொடுத்த வார்னிங் | Arvind Kejriwal

Update: 2024-09-20 16:40 GMT

அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்று, டெல்லி மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி, உத்தரபிரதேசத்தில் மின்கட்டணத்தை பாஜக அரசு உயர்த்தியுள்ளதாகவும், நீண்ட மின்வெட்டு விதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். 5 கிலோவாட் மின் இணைப்புக்கான விலையை 118 விழுக்காடும், ஒரு கிலோவாட் மின் இணைப்புக்கான விலை 250 விழுக்காடும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நொய்டா, கிரேட்டர் நொய்டா, காஜியாபாத் ஆகிய பகுதிகளில் 8 மணிநேரம் மின்வெட்டு விதிக்கப்பட்டதாக தெரிவித்த அதிஷி, நீண்ட மின்வெட்டு மற்றும் அதிக விலை மின்சாரம் தான் பாஜக மாடலா? என்று கேள்வி எழுப்பினார். இதனால்தான் டெல்லி மக்கள் மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் முதலமைச்சராக்குவது மிகவும் முக்கியம் என்ற அவர், இல்லையெனில் உத்தரபிரதேசத்தை போன்று டெல்லியிலும் விலையுயர்ந்த மின்சாரம், நீண்ட மின்வெட்டு பார்க்கும் நிலை வரும் என்று எச்சரித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்