ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் குறித்து பிரச்சனை

Update: 2024-07-07 02:44 GMT

ஆம்ஸ்ட்ராங் உடல் கட்சி அலுவலத்தில் அடக்கம் செய்வது தொடர்பான வழக்கு இன்று காலை 8.30க்கு நடைபெறுகிறது.

ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்த பகுஜன் சமாஜ் கட்சியினர், அதற்காக அனுமதி கோரி மாநகராட்சியிடம் மனு அளித்திருந்தனர். ஆனால் மாநகராட்சி சார்பில் மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதீமன்றட்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து, இந்த வழக்கை நீதிபதி அனிதா சுமந்த நாளை காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த அனுமதி வழஙகப்பட்டது. ஆனால், இந்த வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் விசாரிக்க கூடாது என ஆம்ஸ்ட்ராங் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்க வழக்கை மாநகராட்சிகளுக்கான நீதிபதியே விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுதினர். இந்நிலையில், இந்த வழக்கை நீதிபதி பவானி சுப்புராயன் நாளை காலை 8.30 மணிக்கு விசாரணை நடத்துவார் என நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்