காங்கிரஸை கடுமையாக சாடிய பிரதமர் மோடி | Congress | PM Modi | BJP | Thanthitv

Update: 2024-10-05 13:26 GMT

மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், 23 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், டெல்லியில் அண்மையில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் இதன் மூளையாக இருப்பார் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்தார். இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமை ஆக்கி, அதன் மூலம் வரும் பணத்திலிருந்து தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி நினைப்பதாக குற்றம் சாட்டிய மோடி, அத்தகைய உள்நோக்கங்கள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். காங்கிரஸ் கட்சி அர்பன் நக்சல்களால் இயக்கப்படுகிறது என்றும், அனைவரும் ஒன்றுபட்டு விட்டால் நாட்டை துண்டாட நினைக்கும் அவர்களின் உள்நோக்கம் தோல்வி அடைந்து விடும் என்று காங்கிரஸ் கருதுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்