"காங்.கால் முடியாததை செய்துள்ளோம்".. வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் ப்ளஸ் என்ன?.. அண்ணாமலை கருத்து

Update: 2024-08-09 02:29 GMT

வக்பு வாரிய சட்டத்திருத்தம் அனைத்து இஸ்லாமிய சமூக மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் மூலம் யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியால் செயல்படுத்த முடியாததை தற்போது செயல்படுத்த முயன்றுள்ளதோடு, அவர்கள் ஆட்சியில் அமைக்கப்பட்ட சச்சர் குழுவின் பரிந்துரைகள் முழுவதுமாக சட்டத்திருத்தத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதாக அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்த சட்டத்திருத்தம் மூலம், வக்பு வாரியங்களை சிறப்பாக நடத்த நிர்வாக திறனுள்ள அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும், இஸ்லாமிய ஏழை பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கிடைக்கவேண்டிய சொத்துக்கள் பறிக்கப்படுவது தடுக்கப்படும் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்