"யார் யாருக்கு எந்த தொழில் தெரியுமோ அந்த தொழில் தான் செய்வார்கள்" -பாமகவுக்கு துரைமுருகன் பதிலடி

Update: 2024-07-02 11:36 GMT

"யார் யாருக்கு எந்த தொழில் தெரியுமோ அந்த தொழில் தான் செய்வார்கள்" - பாமகவுக்கு துரைமுருகன் பதிலடி

வன்முறையில் ஈடுபடுவது தான் பா.ம.க.வினரின் வேலை... அவர்களுக்கு அதுதான் தெரியும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து விக்கிரவாண்டி நகரப் பகுதியில், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சி.வே.கணேசன், சேகர் பாபு ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்