சிதைக்கப்பட்ட வட சென்னையின் முக்கிய தலை - விடிந்ததும் தலைநகரில் மாறிய காட்சி

Update: 2024-07-06 10:09 GMT

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. விசாரணை அதிகாரி செம்பியம் காவல் ஆய்வாளர் சிரஞ்சீவி அளித்த ஆவணங்களின் அடிப்படையில், மருத்துவர் துவாரகேஷ் தலைமையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. உடற்கூராய்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பிரேதப் பரிசோதனை நிறைவடைந்ததாக, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் தெரிவித்தார்.

இதனிடையே, மருத்துவமனை வளாகம் முன்பு ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் திரண்டதால் அங்கு முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டனர். படுகொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பியதுடன், சிலர் சோகத்துடன் கண்ணீர் விட்டு கதறினர்.

Tags:    

மேலும் செய்திகள்