இரட்டை இலை சின்னம் வாங்க.. லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2024-08-31 11:37 GMT

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதான வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, வழக்கை விசாரித்த டெல்லி ரௌஸ் அவென்யூ மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி விஷால் கோகனே, குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, அதிகபட்ச தண்டனையை மனுதாரர் ஏற்கெனவே சிறையில் கழித்துவிட்டார் என்று கூறி, சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பான சாட்சிகளையும், ஆதாரங்களையும் கலைக்க முற்படக் கூடாது. பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்