சீக்கிய சமூக பிரதிநிதிகளுக்கு விருந்தளித்த பிரதமர் மோடி

சீக்கிய சமூகம் இன்றி இந்தியாவும், இந்திய வரலாறும் முழுமை பெறாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-30 03:01 GMT
சீக்கிய சமூக பிரதிநிதிகளுக்கு விருந்தளித்த பிரதமர் மோடி

சீக்கிய சமூகம் இன்றி இந்தியாவும், இந்திய வரலாறும் முழுமை பெறாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பல்வேறு துறைகளை சேர்ந்த சீக்கிய சமூக பிரதிநிதிகள் குழுவுக்கு பிரதமர் மோடி தனது இல்லத்தில் விருந்து அளித்தார்.

பின்னர் சீக்கிய சமூக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் சீக்கிய சமூகத்துடனான தமது தொடர்புகளை பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, சீக்கியர்களின் புனித தலங்களான குருத்வாராவுக்கு செல்வது, சேவைக்காக நேரத்தை செலவிடுவது, அங்கு வழங்கப்படும் உணவுகளை அருந்துவது, தமது வாழ்க்கையின் அங்கம் என குறிப்பிட்டார்.

புதிய பரிமாணங்களைத் தொட்டு ஒட்டுமொத்த உலகத்தையும் தனது முத்திரையை பதித்து விட்டு புதிய இந்தியா செல்வதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்று இதற்கு மிகப் பெரிய உதாரணம் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்