முதலமைச்சருடன் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் சந்திப்பு...

புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி சென்னையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

Update: 2019-02-15 01:11 GMT
புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி சென்னையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இடையே நடைபெற்று வரும் சூழ்நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று ரங்கசாமி கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்