முதலமைச்சருடன் மத்திய இணையமைச்சர் சந்திப்பு - பிரதமர் வருகை, 4 வழிச்சாலை திட்டம் குறித்து ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

Update: 2018-12-26 11:19 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவது மற்றும் மத்திய அரசால் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நான்கு சாலை திட்டம் மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் தொடர்பாக அப்போது மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்ததாகவும் கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்