"ஒரே குடும்பத்தை சேர்ந்த 30 பேர்"...தனித்தனியாக சிதறிய உடல் பாகங்கள்.. - குலைநடுங்க வைக்கும் தகவல்

Update: 2024-08-01 16:16 GMT

கேரள மாநிலம் வயநாடு அடுத்த முண்டக்கை பகுதியைச் சேர்ந்த ஜம்ஷீர் என்பவர், தனது குடும்பத்தைச் சேர்ந்த 30 பேரை காணவில்லை என வேதனையுடன் தெரிவித்தார். உடல்களை அடையாளம் காண மருத்துவமனை வளாகத்தில் காத்துக் கொண்டிருந்த அவர், 3 நாட்களாக தேடி வருவதாகவும், எந்தத் தகவலும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், செல்போனில் உள்ள உறவினர்களின் புகைப்படங்களை காண்பித்து வேதனையை பகிர்ந்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்