மனைவியுடன் பலவந்த உறவு... கணவர் குற்றவாளியா?- உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு என்ன சொன்னது?

Update: 2024-10-04 06:17 GMT

திருமணத்திற்கு பின் மனைவியுடன் கணவர் பலவந்தமாக உறவு கொள்வதை குற்றமாக கருதக்கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக இருமாறுபட்ட தீர்ப்புகளை டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு விசாரணைக்கு சென்றது. இதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்த மத்திய அரசு, மனைவியுடன் பலவந்தமாக உறவு கொள்ள கணவருக்கு உரிமை இல்லை என்றாலும், அதை பாலியல் குற்றமாக கருத முடியாது என தெரிவித்துள்ளது. மேலும் கணவன் - மனைவி உறவில் தனிநபரின் ஒப்புதல் இருந்ததா என்பதை நிரூபிப்பது கடினம் என்றும், அதை பாலியல் குற்றமாக கருதி தண்டனை வழங்குவது சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்