"இந்தியாவின் வளர்ச்சியை கிறிஸ்தவர்கள் அழிக்க முயன்றார்கள்" - பரபரப்பை கிளப்பிய ஆர்.என்.ரவி

Update: 2024-09-08 06:31 GMT

இந்தியாவின் வளர்ச்சியை ஆங்கிலேயர்களும், கிறிஸ்தவர்களும் திட்டமிட்டு அழிக்க முயன்றதாக, ஆளுநர் ரவி பேசியுள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் கல்வி குழுமத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சியை ஆங்கிலேயர்களும், கிறிஸ்தவ மதபோதகர்களும் திட்டமிட்டு அழிக்க முயன்றதாக தெரிவித்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பிரிவினைவாதம் தொடங்கியதாகவும், நாட்டின் அடையாளத்தை அழிக்க, ஆங்கிலேயர்கள் கல்வி முறையை மாற்றி அமைத்ததாகவும் ஆளுநர் ரவி தெரிவித்தார். பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க மதமாற்றம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்திய நிலையும், முன்பு இருந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் தமிழகத்திலிருந்து 70 ஆயிரம் பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியதால் அது நிறுத்தப்பட்டதாகவும், அதன்பிறகு இந்தியாவின் மதிப்பு உலக நாடுகளிடையே வளர்ந்து விட்டதாகவும் ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்