புதுச்சேரி பாஜக உறுப்பினர் சேர்க்கை விவகாரம் - மாநில பொதுச் செயலாளர் மெளலிதேவன் முக்கிய அறிவிப்பு

Update: 2024-09-21 07:30 GMT

புதுச்சேரியில் பொய்யான தகவல் கூறி பாஜகவில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் உண்மை இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்தியால் பேட்டை பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து ஆதார் மற்றும் குடும்ப அட்டை விவரங்கள் பெறப்பட்டுள்ளன. இவை பெறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விவரங்களை பகிர்ந்தவர்கள் பாஜகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இத்தகவல் உண்மை எனக் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென பாஜக மாநிலச் பொதுச் செயலாளர் மெளலிதேவன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்