திடீரென கேட்ட பயங்கர சத்தம் - மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டுக்குள் விழுந்த ராக்கெட்

Update: 2024-09-07 10:55 GMT

மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி சமூக மக்கள் இடையிலான மோதல் தொடர்ந்து வருகிறது. சமீப காலமாக அங்கு ட்ரோன்களில் நடத்தப்படும் தாக்குதல் கவலையை அதிகரித்துள்ளது. பிஷ்ணுபூர் மாவட்டத்தில் கிராமங்களில் தீவிரவாதிகள் ராக்கெட்களையும் வீசியிருக்கிறார்கள். மொய்ராங்கில் முன்னாள் முதல்வர் கொய்ரெங் வீட்டில் ராக்கெட் வீசப்பட்டது. இதில் அவரது வீட்டில் வேலை பார்த்தவர் உயிரிழந்த சூழலில், 6 பேர் காயம் அடைந்தனர். இதன் தொடர்ச்சியாக ஜிரிபாம் பகுதியில் மோதல் வெடித்ததில் 5 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிரிபாமில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் வீட்டில் தூங்கியவரை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆயுதம் ஏந்தியவர்கள் இடையே சண்டை வெடித்ததில் 4 பேர் உயிரிழந்து இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு அதிகரிக்கலாம் என கூறப்படும் வேளையில், பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்