குலை நடுங்கும் கொடூர ஆபாச வீடியோ... நாடே அலறும் `காம பூத’த்தின் வேறு முகம் - ரத்தம் தெறிக்க வேட்டை

Update: 2024-08-14 05:54 GMT

குலை நடுங்கும் கொடூர ஆபாச வீடியோ

நாடே அலறும் `காம பூத’த்தின் வேறு முகம்

இன்ச் இன்சாக ரத்தம் தெறிக்க வேட்டை

30 வயதில் 4 மனைவி...சிதைந்த இந்தியாவின் மகள்

ஒரு மனிதன் இப்படியெல்லாம் இருக்க முடியுமா?

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கண்கள்... முக்கு... வாயில் ரத்தம்... பிறப்பு உறுப்பு, வயிறு, தொடை, கழுத்து, வலது கை, உதட்டில் காயங்கள் என வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனை... சித்ரவதை... வலி... என நரக வேதனையில் கொலை செயப்பட்டிருக்கிறார் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்.

அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையை வாசிக்கவே, கை... கால் அச்சத்தில் நடுங்குகிறது.. கண்கள் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. இந்த கொடூரத்தை அரங்கேற்றியது காவல் துறையோடு தன்னார்வலர் போர்வையில் பணியாற்றிய சஞ்சய் ராய் எனும் மனித மிருகம்... கொடூரமான குற்றத்தை அரங்கேறிய 33 வயதாகும் சஞ்சய் ராயின் கோர முகங்கள் சமூகத்திற்கு வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

பயிற்சி பெற்ற குத்துச்சண்டை வீரரான சஞ்சய் ராய்க்கு 4 திருமணங்கள் நடைபெற்றிருக்கிறது.

4 பெண்களும் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் சித்ரவதையை அனுபவிப்பதைவிட வாழாமல் இருப்பதே மேல்... என விட்டுச் சென்றிருக்கிறார்கள். சஞ்சய் ராய்-யின் கோரமான நடத்தை குறித்து 2 வருடங்களுக்கு முன்பாகவே போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2022 ஆம் சஞ்சய் ராயின் முன்னாள் மாமியார் துர்கா தேவி கொடுத்த போலீஸ் புகாரில், 3 மாத கர்ப்பிணியாக இருந்த என்னுடைய மகளை சஞ்சய் ராய் சித்ரவதை செய்திருக்கிறான் என குற்றம் சாட்டியிருக்கிறார்.

அப்போது, காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய்க்கு, போலீஸ் நல வாரியத்தில் சில உயர் அதிகாரிகளின் ஆதரவு இருந்ததாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிப்பதாக உள்ளூர் மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 2 வருடங்களுக்கு முன்பே சஞ்சய் ராய் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த கோரம் அரங்கேறியிருக்காது என்ற பேச்சும் கொல்கத்தா காவல்துறையிலே நிலவுவதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

பிரேத பரிசோதனை அறிக்கையை போல்... சஞ்சய் ராய் குறித்து போலீசார் சொல்லும் தகவலும் கேட்பவரை பதைபதைக்க செய்கிறது... ஆம்... விசாரணையில் கட்டிய மனைவிகளை எல்லாம் உடல்ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார் என்பது தெரியவந்திருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

ஆபாசப் படங்களை பார்த்து அதற்கு அடிமையான சஞ்சய் ராய் செல்போனில் இருந்த பல ஆபாச வீடியோக்கள் மிகவும் கொடூரமானவை, வன்முறை கொண்டது, இயற்கைக்கு மாறான இந்த வீடியோக்களை எல்லாம் ஒருவரால் பார்க்க முடியுமா...? என சஞ்சய் ராய் மனநிலை எங்களை ஆச்சர்யத்தில் அச்சப்பட செய்திருக்கிறது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

பயிற்சி பெற்ற குத்துச்சண்டை வீரரான சஞ்சய் ராய், பல ஆண்டுகளாக மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார். அந்த பழக்கத்தில் கொல்கத்தா காவல்துறை நல வாரியத்திற்கு மாற்றப்பட்டு, மருத்துவர் கொல்லப்பட்ட ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அவுட்போஸ்டில் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இத்தகைய கொடூர மனம் கொண்டவர் எப்படி தன்னார்வலர் ஆனார்...? என்ற கேள்வி கொல்கத்தா காவல்துறையை நோக்கி எழுந்திருக்கிறது 

Tags:    

மேலும் செய்திகள்