கேரளாவிற்கு மீண்டும் வந்த எச்சரிக்கை.. வானிலை மையம் அதிர்ச்சி தகவல்

Update: 2024-08-04 02:09 GMT

கேரளா மாநிலத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் பகுதிகள், ஆற்றங்கரை மற்றும் அணைகளின் கீழ்பகுதிகளில் இருந்தும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்