3 ஆண்டுகளாக சிக்காமல் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த குற்றவாளிகள்; தற்போது சிக்கியது எப்படி?

Update: 2024-09-08 02:44 GMT

திண்டுக்கல்லில் கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த பெண் உட்பட நான்கு பேர் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

சிக்கனம்பட்டியை சேர்ந்த தம்பதி ராஜா - பஞ்சவர்ணம். இவர்களும், இவர்களது மகன் ராஜகுரு, மருமகன் பிரகாஷ் ஆகிய நான்கு பேரும் கொலை வழக்கில் சிறை சென்றனர். கடந்த 2021ஆம் ஆண்டு ஜாமினில் வெளியே வந்த இவர்கள், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்து 3 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், நான்கு பேரும் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டனர். பின்னர், நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்