கேரளா கோரம்.. கண்ணீர் விட்டு அழுத காட்டு யானை.. "மீட்புப்படை வரும்வரை அமைதியாக நின்றது"

Update: 2024-08-03 03:00 GMT

கேரள மாநிலம் வயநாட்டில் அமராவதி என்பவர் தன் கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீட்டை இழந்த அவர்கள், தற்போது முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பேசிய அமராவதி, நிலச்சரிவில் இருந்து தப்பித்து காட்டிற்குள் தஞ்சம் அடைந்தபோது யானையை பார்த்ததாகவும், தங்களை விரட்டி விட வேண்டாம் என யானையிடம் கேட்டதாகவும் தெரிவித்தார். மேலும் தங்களை கண்டு யானை கண்ணீர் சிந்தியதாகவும், மீட்புப்படையினர் தங்களை மீட்கும்வரை யானை அமைதியாக அருகில் இருந்ததாகவும் அமராவதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்