கால்வாய்க்கு அடியில் சிக்கிய உடல்.. 46 மணி நேரத்திற்கு பின் ரயில்வே தண்டவாளத்துக்கு அடியில் பயங்கரம்

Update: 2024-07-16 11:16 GMT

திருவனந்தபுரத்தில் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர் ஜாய் என்பவரது உடல், 46 மணி நேரத்திற்குப்பின் கண்டெடுக்கப்பட்டது. கனமழையால் கால்வாயில் நீர்வரத்து அதிகரித்து, ரயில்வே தண்டவாளங்களின் கீழுள்ள கால்வாய் பகுதியில் ஜாய் சிக்கியதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து கேரள உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரணை நடத்தியது. ஜாயின் மரணம் துரதிர்ஷ்டவசமானது என்றும், சம்பவம் குறித்து ரயில்வே, திருவனந்தபுரம் மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. விபத்து மீண்டும் நிகழாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பத்து நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும், ரயில்வே நிலத்தின் வழியாக செல்லும் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்கு யார் பொறுப்பு என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்