வேலை தேடி வரும் இளம்பெண்களை கூறு போட்டு விபச்சாரம் - கேட்டாலே அதிரவைக்கும் ரகசிய ஒப்பந்தம்

Update: 2024-09-22 05:28 GMT

கேரளாவில் வங்கதேசத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் உள்பட பல பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய பெங்களூரு மற்றும் கொச்சியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேரை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் செரீனா. இவர் கொச்சி எளமக்கரை போலீசில், தன்னுடைய உறவினரான ஒரு இளம்பெண்ணுடன் கொச்சிக்கு வந்ததாகவும், அவரை ஜகிதா என்ற பெண் கடத்திச் சென்று விட்டதாகவும் புகார் அளித்திருந்தார். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் ஜகிதாவை மற்றும் செரீனாவிடம் விசாரணை நடத்தினர். இருவரும், முன்னுக்குபின் முரணாக பதிலளிக்க விசாரணை தீவிரப்படுத்தினர். விசாரணையில், செரீனா பெங்களூருவில் விபசாரம் செய்து வருவதும், வேலை தேடி பெங்களூரு வந்த வங்கதேசத்தை சேர்ந்த இளம்பெண்ணை விபசாரத்தில் தள்ளியதும் தெரிய வந்தது. அத்துடன், கொச்சியில் விபசாரம் செய்து வரும் ஜகிதாவுடன், செரீனாவுக்கு தொடர்பு ஏற்பட, இருவரும் இளம்பெண்களை விபசாரத்திற்காக கொச்சியிலிருந்து பெங்களூருக்கும், பெங்களூருவிலிருந்து கொச்சிக்கும் அனுப்பி வைத்து வந்துள்ளனர். ஒப்பந்தம் படி வங்கதேச இளம்பெண்ணை, ஜகிதா திருப்பி அனுப்பாததால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்