பட்டப்பகலில் வீடு புகுந்து குழந்தைகள் கடத்தல் - வெளியான பகீர் சிசிடிவி காட்சி

Update: 2024-10-25 02:02 GMT

பட்டப்பகலில் வீடு புகுந்து குழந்தைகள் கடத்தல் - வெளியான பகீர் சிசிடிவி காட்சி

பெலகாவி மாவட்டத்தில் அத்தானி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த 2 பேர், அங்கு விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகளை கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில், முகமூடி அணிந்தபடி கூர்மையான ஆயுதங்களுடன் வந்திருந்த மர்ம நபர்கள் 2 பேர், வீட்டிற்குள் நுழைந்த சில நிமிடங்களில் 2 குழந்தைகளையும் தோளில் சுமந்து கொண்டு வெளியே சென்று, அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் புறப்பட்டுச் சென்றனர். இதுகுறித்து குழந்தைகளின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, தனிப்படை போலீசார், குழந்தைகளைத் தேடி வருகின்றனர். குழந்தைகளின் தந்தை சிலரிடம் வாங்கிய கடனை திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பணப் பரிவர்த்தனையால் ஏற்பட்ட தகராறில் குழந்தைகள் கடத்தப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்