டாக்டர் சொன்ன வார்த்தை.. டென்ஷனாகி தாக்கிய இளைஞர்கள் - நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

Update: 2024-09-19 08:01 GMT

குஜராத் மாநிலம் பாவ் நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகின்றது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 12ம் தேதி, ஹிரன் தங்கார், பப்தீப் தங்கார் மற்றும் கௌஷிக் குவாடியா ஆகிய மூன்று இளைஞர்கள் தலையில் அடிபட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியார் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அப்போது எமர்ஜென்சி வார்டுக்குள் காலணியுடன் நுழைந்த அவர்களை பார்த்து, மருத்துவர் செய்திப் கோஹில் காலணிகளை வெளியில் கலட்டுங்கள் எனக்கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள், மருத்துவரை தாக்கி, அங்கிருந்த மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்தியுள்ளனர். சம்பவத்தை அறிந்த போலீசார், வன்முறையில் ஈடுபட்ட 3 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்