EX அமைச்சரின் சொத்துக்களை வசமாக்கிய ED | Kerala

Update: 2024-02-01 07:06 GMT

சட்டவிரோதமாக சொத்து சேர்த்த வழக்கில், கேரள முன்னாள் அமைச்சர் கே.பாபுவின் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. கேரளாவில் 2011 முதல் 2016 வரை மீன்வளத்துறை அமைச்சராக இருந்த கே.பாபு, தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர், சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக எழுந்த புகார் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. 25 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை சட்டவிரோதமாக சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ், அந்த சொத்துக்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்