ஜூஸை வாயில் வைத்ததும் நேர்ந்த கதி -அதிரவைத்த பெண் `சீரியல் கில்லர்கள்'

Update: 2024-09-07 15:42 GMT

குண்டூரில் பெண் சயனைடு கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் ஆந்திராவை உலுக்கியது. இறந்தவர் தெனாலி நகரின் யெடாலிங்கய்யா காலனியை சேர்ந்த நாகூர்பி என்பது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் நாகூர்பியை ஏற்றிவந்த ஆட்டோ ஓட்டுநரை சிக்கவும், ரஜினி, அவரது தாய் ரமணம்மா, வெங்கடேஸ்வரி ஆகிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். கூடுதல் விசாரணையில் அவர்கள் சீரியல் கில்லர்கள் என்பது தெரியவந்ததுள்ளது. வசதியானவர்களிடம் நட்பாக பழகி, தனியாக அழைத்து சென்று சைனைடு கலந்த பானத்தை கொடுத்துவிட்டு, பணம், நகையை சுருட்டியிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இப்படி ஏற்கனவே 3 கொலைகளை அரங்கேற்றியிருக்கிறார்கள் எனவும் 2 கொலைகளுக்கு திட்டம் போட்டியிருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. முக்கிய குற்றவாளியான ரஜினி கம்போடியாவில் சைபர் குற்றத்தில் ஈடுபட்டவர் எனவும் 2022-ல் சொத்து தகராறில் மாமியார் நாகம்மாவை கொன்றவர் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இவர்களுக்கு சயனைடு சப்ளை செய்தவரையும் கைது செய்து விசாரிக்கும் போலீசார், முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்