திடீரென பாய்ந்து டாக்டர் கழுத்தில் கத்தியை வைத்த நபர் - ஒரு நொடி ஆடிப்போன மருத்துவமனை

Update: 2024-04-16 06:51 GMT

#thanthitv #hospital #doctor #pondicherry

திடீரென பாய்ந்து டாக்டர் கழுத்தில் கத்தியை வைத்த நபர் - ஒரு நொடி ஆடிப்போன மருத்துவமனை

புதுச்சேரி பாவாணர் நகரை சேர்ந்தவர், வினோத் குமார். இவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மகனை பார்க்க, குடிபோதையில் சென்றுள்ளார். அப்போது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வினோத்குமாரை அங்கு இருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியே அனுப்பியுள்ளனர். வெளியே, கையில் கத்தியுடன் இருந்த வினோத் குமார், திடீரென மருத்துவமனைக்குள் இருந்து வெளியே வந்த ஒரு மருத்துவரை கழுத்தில் தாக்கியுள்ளார். அவரை மடக்கி பிடித்த பொதுமக்கள் காவல்துறையில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, அரசு மருத்துவர்கள் அனைவரும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் எனக்கூறி, சுமார் ஒருமணிநேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், ஏராளமான நோயாளிகள் அவதிக்கு உள்ளாகினர். காயமடைந்த மருத்துவர், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது, குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்