திடீரென நடுவானில் குலுங்கிய விமானம் - 40 பயணிகளின் நிலை என்ன?

மேற்கு வங்கத்தில் மோசமான வானிலையால் ஸ்பைஸ் ஜெட் விமானம் குலுங்கியதால், 40 பயணிகள் காயமடைந்தனர்.

Update: 2022-05-02 02:59 GMT
மும்பையில் இருந்து துர்காபூர் நோக்கி ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் போயின் 737 ரக விமானம் சென்றது. அப்போது, மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று வீசியதால், நடுவானில் விமானம் குலுங்கியது. இதையடுத்து, விமானம் பாதுகாப்பாக துர்காபூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்திற்குள் பயணிகளின் பெட்டிகள் விழுந்த‌தால், 40 பயணிகள் காயமடைந்தனர். அவர்களில் 12 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்