கஞ்சாவுக்கு அடிமையான 15 வயது சிறுவன்; தாய் எடுத்த அதிரடி முடிவு - பதறவைக்கும் காட்சி

தெலங்கானா மாநிலத்தில் கஞ்சாவுக்கு அடிமையான 15 வயது மகனை மீட்கும் நடவடிக்கையாக, கண்களில் மிளகாய் பொடி போட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2022-04-04 18:44 GMT
தெலங்கானா மாநிலத்தில் கஞ்சாவுக்கு அடிமையான 15 வயது மகனை மீட்கும் நடவடிக்கையாக, கண்களில் மிளகாய் பொடி போட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. கொத்தாடா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கஞ்சாவுக்கு அடிமையானார். இதனால் வேதனையடைந்த அவரது தாய், மகனை வீட்டிற்கு எதிரில் உள்ள தூணில் கட்டி கண்களில் மிளகாய் பொடி தூவினார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் சூரியாபேட்டை போலீசார் விரைந்து சென்று தாய், மகன் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்