விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் உயிரிழப்பு - காவல் நிலையத்திற்கு தீ வைத்த உறவினர்கள்!

பீகார் மாநில பெட்டியா பகுதியில் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் உயிரிழந்த காரணத்தில் காவல்நிலையத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

Update: 2022-03-20 02:37 GMT
பெட்டியா பகுதியில் ஹோலி கொண்டாட்டத்தின்போது டி.ஜே.(DJ) இசைநிகழ்ச்சி நடத்திய இளைஞரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில், போலீசாரின் விசாரணையில் அந்த இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞரின் உறவினர்கள் காவல் நிலையத்திற்கும், காவல் வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்