அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Update: 2022-03-19 14:01 GMT
கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஹொஸ்கோட்டை பகுதியில் இருந்து தும்கூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது,  பலவள்ளிகட்டே என்ற இடத்தில்  பேருந்து வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து  விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில், பலரது நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், பேருந்து அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
 

Tags:    

மேலும் செய்திகள்