"இந்தியாவில் நீதித்துறை சிறப்பாக இல்லை" - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

இந்தியாவில், நீதித்துறை சிறப்பாக இல்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-19 06:42 GMT
இந்தியாவில், நீதித்துறை சிறப்பாக இல்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர் சங்கங்களுக்கு சட்டப்புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் கவுன்சிலில் நடைபெற்றது. இதில் , சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் ரகுபதி, வழக்கறிஞர்களின் முக்கியத்துவம் தங்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது உடனிருந்தவர்கள் வழக்கறிஞர்களே என்றும் அவர் கூறினார். பின்னர் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநில அரசிடம் உள்ள அதிகாரங்களைக் கொண்டு, நீதித்துறையில் நல்ல மாற்றங்கள் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்