"அதிசயத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல" - 45 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட 7 மாடி கட்டடம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், 45 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட 7 மாடி கட்டடத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.

Update: 2022-03-17 14:12 GMT
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், 45 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட 7 மாடி கட்டடத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். 

தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த கட்டிடம் ஐந்தாம் தலைமுறை அதிநவீன விமானங்களின் உள்நாட்டு வளர்ச்சிக்கான மையமாக பயன்படுத்தப்பட உள்ளதாக டிஆர்டிஓ அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த கட்டடத்தை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர்,  இந்த வித்தியாசமான முயற்சி, உலகிலேயே முதல்முறையாக மேற்கொள்ளப்பட்டதாகவும்,  இந்த கட்டடம் அதிசயத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல என்றும் தெரிவித்தார். இந்த திட்டம், சில ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டு, 45 நாட்களில் கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்