மாணவர் அமைப்பினர் இடையே கடும் மோதல் - கேரள முதல்வர் தகவல்

கேரளாவில் மாணவர் அமைப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, விசாரிக்கப்பட்டு வருவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-03-17 11:24 GMT
கேரளாவில் மாணவர் அமைப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, விசாரிக்கப்பட்டு வருவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். திருவனந்தபுரம் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில், கேரள மாணவர் அமைப்பினரும், இந்திய மாணவர் சங்கத்தினரும் தங்களுக்குள் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக கேரள சட்டமன்றத்தில் விளக்கமளித்த பினராயி விஜயன், மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாவும், காயமடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்