"உலகத்தில் புதிய வரிசை உருவாகியுள்ளது" - பிரதமர் மோடி

அரசு துறைகளுக்கு இடையே ஒத்துழைப்பு இல்லாததால், நாடு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-17 10:51 GMT
அரசு துறைகளுக்கு இடையே ஒத்துழைப்பு இல்லாததால், நாடு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகக் அகாடெமியில் புதிய விளையாட்டு கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும், தற்போது, இந்தியாவின் மீது இருப்பதாக தெரிவித்தார். கொரோனா ஏற்படுத்திய சூழலால், புதுவிதமான உலக வரிசை உருவாகி வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்த புதிய உலக வரிசையில் இந்தியா தனது பங்களிப்பை அதிகரிப்பதோடு, வேகமாக தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசின் பல்வேறு துறைகளுக்கு இடையே ஒத்துழைப்பு இன்மையால் நாடு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்ததாக கூறிய அவர், அதன் காரணமாகவே பிரதமர் கட்சி சக்தி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்