திருப்பதிக்கு வரும் பக்தர்களிடமிருந்து 1100 மதுபாட்டில்கள் பறிமுதல் - அடித்து உடைத்த அதிகாரிகள்

திருப்பதிக்கு வரும் பக்தர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1100 மது பாட்டில்கள் அடித்து, உடைத்து அழிக்கப்பட்டது.

Update: 2022-03-17 04:16 GMT
திருப்பதிக்கு வரும் பக்தர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1100 மது பாட்டில்கள் அடித்து, உடைத்து அழிக்கப்பட்டது. திருப்பதியில் மது, மாமிசம், புகையிலை சிகரெட் போன்றவற்றை பயன்படுத்த தடை உள்ளது. இதனிடையே திருப்பதிக்கு வரும் பக்தர்களை அலிபிரி சோதனை சாவடியில் தணிக்கை செய்த பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் திருப்பதிக்கு வந்த பக்தர்களிடம் இருந்து கடந்த 4 மாதங்களில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்ட 1100 மதுபாட்டில்கள் கலால்துறை அதிகாரிகள் முன்னிலையில் அடித்து உடைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்