மாமியாரின் கள்ளக்காதலனை வீட்டிற்குள் விட மறுத்த மருமகளுக்கு அடி, உதை

மாமியாரின் கள்ளக்காதலனை வீட்டிற்குள் விட மறுத்த மருமகளுக்கு அடி, உதை

Update: 2022-03-10 10:07 GMT
எர்ணாகுளத்தை சேர்ந்த முகேஷ் என்பவருக்கு வைஷ்ணவி என்ற பெண்ணுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வைஷ்ணவி கணவன் வீட்டில் வசித்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அவரது மாமியாருடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மருமகளுக்கு தெரியவரவே, அவர் மாமியாரை கண்டித்துள்ளார். மேலும், இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் வழக்கம்போல அந்த நபர் மாமியாரை பார்க்க வந்துள்ளார். அந்த நபரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் வைஷ்ணவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால், வைஷ்ணவியின் முகத்தில் தாடை உள்ளிட்ட 3 இடங்களில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வைஷ்ணவியை தாக்கிய மேற்படி நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்