சபரிமலை ஐயப்பன் கோயில் - பங்குனி ஆராட்டு திருவிழா

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

Update: 2022-03-09 10:23 GMT
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழாவிற்காக இன்று காலை 10.30 மணி அளவில் கொடி ஏற்றப்பட்ட நிலையில், வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெற உள்ளது. தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், திருவிழாவை முன்னிட்டு கூடுதல் பக்தர்களை அனுமதிக்கும் வகையில் நிலக்கல்லில் உடனடி தரிசன முன் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்