வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிக்கு நடிகர் சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து நிதியுதவி | Wayanad Tragedy

Update: 2024-08-01 16:59 GMT

வயநாடு பேரிடர் மீட்பு பணிக்காக நடிகர் சூர்யா, கார்த்தி மற்றும் ஜோதிகா சார்பில் ஐம்பது லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவி வருபவர்களுக்கும், தனது மரியாதையை தெரிவித்துள்ளார். மேலும், மீட்பு பணி நிதியாக, ரூபாய் ஐம்பது லட்சத்தை சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இணைந்து வழங்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்