ஷாலினிக்கு திடீர்னு என்னாச்சு..? ஷூட்டிங்கை விட்டு ஓடிவந்த அஜித்

Update: 2024-07-04 06:39 GMT

அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அஜித்குமார் திடீரென சென்னை திரும்பினார். நீண்ட நாட்களுக்கு பின் விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அஜித் திடீரென ஏன் சென்னை வந்தார் என கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் நடிகையும், அஜித்குமாரின் மனைவியுமான ஷாலினிக்கு சிறிய அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மனைவி ஷாலினிக்கு துணையாக இருக்கவே, அஜித்குமார் சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்