பிரபல நடிகருக்கு வந்த அடுத்த சிக்கல் | Kerala | Actor siddique | Police

Update: 2024-10-22 06:40 GMT

பாலியல் புகார் வழக்கில் நடிகர் சித்திக்குக்கு முன் ஜாமின் வழங்கியிருப்பதை ரத்து செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் கேரள காவல்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.நடிகர் சித்திக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 30ஆம் தேதி முன் ஜாமின் வழங்கியது. இந்த வழக்கு தொடர்பாக திருவனந்தபுரம் காவல் உதவி ஆணையர் அஜிசந்திரன் நாயர் நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். மலையாள திரைத்துறையில் சித்திக் மிகவும் செல்வாக்கு படைத்தவர் என்றும், புலன் விசாரணையில் சாட்சியங்களை கலைக்க முற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிரான ஏராளமான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும், முன் ஜாமினை நீட்டித்தால் சாட்சி சொல்ல முன் வரமாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு முன் ஜாமின் வழங்கினால், பெண்கள், குழந்தைகள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்கும் என்றும், அவருக்கு வழங்கிய முன் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்